சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல், ரகளை காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது. கூட்டம் தொடங்குவ தற்கு முன்பு, நடிகர் கருணாசின் கார், விஷாலின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் தனியார் கல்லூரியில் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக் கல்லூரிக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் காரணமாக சங்கத்துக்கு சொந்தமான இடத்தி லேயே கூட்டம் நடந்தது.
ஏற்கெனவே சங்கத் தேர்தலின் போது நாசர், விஷால் அணிக்கும் முந்தைய தலைவர் சரத்குமார் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருதரப்பின ருக்கும் இடையே அப்போது முதற்கொண்டே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. எனவே சரத்குமார் ஆதரவாளர் களால் பொதுக்குழு கூட்டத்துக்கு இடையூறு ஏற்படலாம் எனக் கருதப்பட்டது. இதையடுத்து கூட் டம் நடைபெற்ற இடத்தில் போலி சார் குவிக்கப்பட்டு இருந்தனர்.