விசாகப்பட்டினம்: மத்திய அரசாங் கம் விரைவில் ஒரு பொதுவான அட்டையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஒரே அட்டை மூலம் 21 வங்கிகளின் சேவை களை வாடிக்கையாளர்கள் விரை வில் பெற்று பயன் அடையலாம். இந்த அட்டை தொடர்பிலான வழி காட்டி வரைமுறைகளைச் செயல் படுத்த பணியாற்றி வருகிறோம். ஆனால் அந்த அட்டைக்கு இன் னும் பெயர் வைக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் வெங் கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசு கஜானாவில் குவியும் பல லட்சம் கோடி நிதியை வைத்து நதிநீர் இணைப்புத் திட் டத்தை நிறைவேற்ற முடிவு செய் திருப்பதாகவும் அவர் கூறினார். ஆந்திர மாநிலம் தடிபள்ளிகுடம் என்ற இடத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி யில் நாயுடு பேசினார்.