டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரை அந்நாட்டு ராணவத்தினர் முழுமையாக தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதற் காக கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதாக மனித உரிமைகளுக் கான கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அலெப்போ நகர மக்களில் சுமார் 10,000 பேர் அங்கிருந்து தப்பிச் சென்று அரசாங்கப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நகரிலிருந்து சுமார் 1,500 பேர் தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகத் தகவல் கூறும் வேளை யில் சுமார் 2,500 பேர் அந் நகரிலிருந்து வெளியேறி விட்டதாக ரஷ்யா கூறுகிறது.
அலெப்போ நகரில் நீடிக்கும் சண்டைக்குப் பயந்து அங்கிருந்து வெளியேறிய மக்கள் சிரியா நாட்டு அரசாங்கப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாவட்டத்தில் தற்காலிக முகாமில் தங்கியுள்ளனர்.
அலெப்போ நகரின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள அரசாங்கப் படையினர் அந்நகரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ள பகுதிகளில் அரசாங்கப் படையினர் முன்னேறிச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன. படம்: ஏஎஃப்பி