சென்னை: தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி யால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதுபோன்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்வதாக மனுதாரருக்கு நீதிமன்றம் கடும் கண்டனமும் தெரிவித் துள்ளது. முதல்வர் ஜெயலலிதா வின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் டிராபிக் ராமசாமி கோரியிருந்தார்.
எனினும் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு, மீண்டும் மீண்டும் இதேபோன்ற வழக்குகளை தொடரக்கூடாது என்று டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்தியது.