திருவனந்தபுரம்: கேரள மாநில அரசு ஊழலை ஒழிக்கும் வகையில் இரு கைபேசி செயலிகளை அறிமுகம் செய்துள் ளது. ArisingKerala, Whistle Now என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலிகள் கேரளா மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பாதிக்கப்பட்ட நபர் யாராக இருந்தாலும் உரிய ஆதாரத்துடன் புகார் தரலாம்.
உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. அனைத்துலக ஊழல் ஒழிப்பு தினமான நேற்று முன்தினம் திருவனந்தபுரத் தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பினராயி விஜயன் இவ்விரு ஊழல் தடுப்பு செயலிகளையும் அறிமுகம் செய்துவைத்தார்.