வீவகவின் அருகாமை வீட்டு மானிய திட்டத்துக்கு அமோக ஆதரவு

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 'அருகாமை வீட்டு மானிய திட்டம்' என்ற திட்டத்தை ஓராண்டுக்கு முன் அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தில் இதுவரையில் $83 மில்லியன் தொகை மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும் 4,300க்கும் அதிக குடும்பங்கள் பயனடைந்து இருப்பதாகவும் கழகம் தெரிவித்திருக்கிறது. அருகாமை வீட்டு மானிய திட்டத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கமூட்டுவ தாக இருக்கிறது என்று கழகம் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரர்கள் தங்களுடைய பெற்றோருடன் அல்லது மணமான பிள்ளைகளுடன் அல்லது அவர் களுக்கு அருகே மறுவிற்பனை வீடு ஒன்றை வாங்க இந்தத் திட்டம் மானியம் வழங்குகிறது.

சிங்கப்பூரர்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது மணமான பிள்ளைகள் வசிக்கும் வீடுகளுக்கு அருகே புதிய வீவக அடுக்குமாடி வீட்டை வாங்க உதவும் இதர ஏற்பாடுகளுக்கு இந்தச் செயல் திட்டம் ஓர் உறுதுணையாக இருக் கிறது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!