சிலேத்தார் விரைவுச்சாலையில் நேற்று பிற்பகல் ஒரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளான ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி உதவி தேவை என்று கேட்டு தனக்கு நேற்று பிற்பகல் 12.50 மணிக்குத் தகவல் வந்ததாகவும் உடனடி யாக இரண்டு தீயணைப்பு வாக னங்களையும் ஒரு மோட்டார் சைக்கிள் தீயணைப்பு வாகனத் தையும் மருத்துவ வண்டியையும் தான் அங்கு அனுப்பியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இந்தப் படையின் அதிகாரிகள் தீயை அணைத்தனர். 20க்கும் அதிக வயதுள்ள இரண்டு ஆட வர்கள் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டனர். இதற்கிடையே, இந்தச் சம்ப வத்தை நேரில் பார்த்த மலிசா மால்சா என்ற 24 வயது மாணவி, பிற்பகல் சுமார் 1 மணிக்கு அந்த விரைவுச்சாலை லெண்ட்டோர் புறவழி அருகே தாம் புகையைப் பார்த்ததாகக் கூறினார். அந்த இடத்தை டாக்சியில் நெருங்க நெருங்க புகை மோச மானதாக இருந்தது, வெப்பமாக வும் இருந்தது என்றார் அவர்.
சிலேத்தார் விரைவுச்சாலையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி அளவில் விபத்து ஒன்றை அடுத்து ஒரு கார் தீ பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து இரண்டு ஆடவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். படம்: ஃபேஸ்புக்/மால்சா