கென்யாவில் எண்ணெய் லாரி தீப்பற்றிக் கொண்டதில் 30 பேர் பலி

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து நைவாஷா நகரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை வழியாக எண்ணெய் லாரி ஒன்று உகாண்டா நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமை பின்னிரவு, நைவாஷா நகரின் வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் ஓட்டுநர் வாகன கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அந்த எண்ணெய் லாரி, அந்தச் சாலையில் வந்த மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரியில் இருந்த எண்ணெய் தீப்பற்றிக் கொண்டதும் வாகனங்கள் வெடித்துச் சிதறின. இந்தத் தீயில் வாகனங்களில் இருந்த 30 பேர் உடல்கருகி உயிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!