சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவ தில் அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவையில் பதற்றம் நிலவியது. நேற்று முன்தினம் ரத்தினகிரி பகுதியில் ஜெயலலிதாவின் பதாகை ஒன்றை வைத்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதை திமுகவினர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக மகளிரணியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது திமுகவினரும் திரண்டு வந்து பதில் முழக்கங்களை எழுப்பவே இரு தரப்புக்கும் மத்தியில் மோதல் உண்டானது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலிசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைய வைத்தனர். அங்கு போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!