மும்பை: அண்மைக்காலமாக இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது போட்டியில் பெற்றதே இனிப்பான வெற்றி என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார். முதல் போட்டி டிராவில் முடிய, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றியை ருசித்த இந்திய அணி தொடரையும் 3-0 எனக் கைப்பற் றியது. இன்னிங்ஸ் வெற்றியைத் தவிர்க்க இங்கிலாந்து அணி இன்னும் 49 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் நேற்று ஐந்தாம் நாளில் அவ்வணி மேலும் 13 ஓட்டங்களை மட்டும் சேர்த்து மீதமிருந்த நான்கு விக்கெட்டு களையும் பறிகொடுத்தது. இதை அடுத்து, இந்திய அணி இன் னிங்ஸ் மற்றும் 36 ஓட்ட வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எட்டு ஓவர்களிலேயே இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை வென்ற விராத் கோஹ்லி (இடது) தலைமையிலான இந்திய அணி, போட்டி முடிந்தபின் சிரித்து மகிழ்ந்தபடி திடலை வலம் வந்து ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். படம்: ஏஎஃப்பி