கோலாலம்பூர்: மலேசியாவின் 15வது மாமன்னராக 5வது கிளந்தான் சுல்தான், சுல்தான் முகம்மது நேற்று அந்நாட்டின் மாமன்னராக பதவி ஏற்றார். அதே நேரத்தில், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா துணை மாமன்னராக பதவி ஏற்றுக்கொண்டார். கோலாலம்பூரில் இஸ்தானா நெகாராவில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இருவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண் டனர். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில், 47 வயதான 5வது கிளந்தான் சுல்தான், சுல்தான் முகம்மது நாட்டின் 15வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்ற சதுக்கத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சுல்தான் முகம்மது (இடது) ராணுவ மரியாதை அணிவகுப்பை பார்வையிட்டார். படம்: ஏஎஃப்பி