ஜகார்த்தா ஆளுநருக்கு எதிரான சமய நிந்தனை வழக்கு

ஜகார்த்தா: இஸ்லாத்தை அவமதிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கண்ணீருக் கிடையே அஹோக் என்று அழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி ஜஹஜா புர்னாமா கூறியுள்ளார். ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கிக்கு எதிரான சமய நிந்தனை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு எதிரான விசாரணை யின்போது நீதிமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு சீன வம்சாவளியினரான பாசுக்கி, தேர்தலில் தம்மை எதிர்த்து நிற்பவர்கள் குர்ஆனைப் பயன்படுத்துவதாக தாம் விமர்சித்தபோது இஸ்லாத்தை அவ மதிக்கவில்லை என்று கூறினார். "குர்ஆன் வாசகத்தை மொழிபெயர்த்துக் கூறவோ இஸ் லாத்தை அவமதிக்கும் எண்ணமோ எனக்கில்லை. "எனது விமர்சனம் இஸ் லாத்தைத் தவறாகப் பயன்படுத்தி நியாயமற்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற எண்ணும் நெறி தவறிய அரசியல்வாதிகளுக்கு எதிரானது. "ஒருவேளை நான் பயன்படுத்திய வார்த்தைகள் எனது எண்ணத்துக்கு மாறான கருத்தை நான் கொண் டிருப்பதற்கான தோற்றத்தைத் தந்திருக்கலாம்," என அஹோக் என பிரபலமாக அழைக்கப்படும் பாசுக்கி கூறினார்.

விசாரணை தொடங்குவதற்கு முன்பு நீதிமன்றத்திற்குள் நுழைந்த ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!