மீண்டும் காவல்துறை அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே 'சிறுத்தை' படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார் கார்த்தி. அதன்பிறகு, நிறைய படங்களில் நடித்திருந்தாலும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் போலிஸ் அதிகாரி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார்.
இப்படத்திற்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை 'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்கவுள்ளனர். மேலும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.