சுதாஸகி ராமன்
வேதநூல் பைபிளில் விவரிக்கப் பட்டுள்ளது போல் கிறிஸ்துவின் பிறப்பைச் சித்திரிக்கும் காட்சியை வீட்டில் அலங்காரமாகச் செய்வதை கிறிஸ்துவர்களில் பலர் பண்டிகை காலத்தின்போது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வின் முப்பரிமாண சித்தி ரிப்பைக் குறிக்கும் இந்தக் காட் சியைச் சிறிய பொம்மைகளைப் பயன்படுத்தி தேவாலயங்களில் மட்டுமின்றி பலர் வீட்டிலும் கிறிஸ் துமஸ் பண்டிகைக் காலங்களின் போது அலங்காரங்களாக வைக் கின்றனர்.
மாட்டுத் தொழுவத்தில் உள்ள வைக்கோல் தொட்டியில் படுத் துறங்கும் குழந்தை இயேசுவுடன் மரியாள், ஜோசஃப், ராயர் மூவர், இடையர்கள் ஆகியோர் இந்த இயேசு குடில் காட்சி அலங் காரத்தில் இடம்பெறுவர். சில சமயங்களில் கொட்ட கையைச் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒட்டகம், ஆடு, காளை, கழுதை ஆகிய விலங்குகளும் வைக்கப் பட்டிருக்கும். மேலும், தாள், அட்டை, கல், வைக்கோல் போன்ற பொருட்களால் சிறப்பு இயேசு குடில் காட்சி செய்யப்படும்
பெட்ரினா கோமெஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில். படம்: பெட்ரினா கோமெஸ்