இந்தோனீசியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடு முறையின்போது பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு இந்தோனீசியப் போலிசார் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். குறிப்பாக மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும் தேவாலயங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியப் போலிசார் பல இடங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது ஐந்து சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்ததன் மூலம் அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலிசார் கூறினர். இந்நிலையில் இந்தோனீசியாவில் சுமார் 155,000 போலிசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடு பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் நாடிச் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களை முறியடிக்க போலிசார் உச்சகட்ட விழிப்பு நிலையில் உள்ளனர்.

ஜகார்த்தா தேவாலயத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!