இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த நிதியாளர் கிஷோர் பஜியாவாலாவிடம் (படம்) இருந்து கணக்கில் வராத ரூ.10.45 கோடி பணத்தை வரு மான வரித்துறையினர் அண் மையில் கைப்பற்றினர். சுமார் 400 கோடி ரூபாய் அள வுக்கு கிஷோர் பஜியாவாலாவிடம் சொத்து இருக்கிறது. செல்லா நோட்டு அறிவிப்புக்குப் பிறகு வங்கியில் பணம் செலுத்தவும் எடுக்கவும் 700 பேரை அவர் பயன்படுத்தியதாக சிபிஐ வட்டா ரங்கள் தெரிவித்தன. அவர் 27 வங்கிக் கணக்கு கள் வைத்திருந்ததாகவும் அதில் 20 'பினாமி' கணக்குகளின் மூலம் ஏராளமான பணத்தை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆயினும், எவ்வளவு கறுப்புப் பணத்தை அவர் வங்கியில் செலுத் தினார், மாற்றினார் என்ற விவரம் தெரியவில்லை. அ வ ரி ட மி ரு ந் து புதிய நோட்டுகளாக ரூ.1.45 கோடி, ரூ.1.48 கோடி மதிப்புடைய தங்கம், ரூ.4.9 கோடி மதிப்புள்ள தங்க நகை கள், ரூ.1.4 கோடி மதிப்பிலான வைர நகைகள், ரூ.77.8 லட்சம் பெறுமானம் உடைய வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.