மணிலா: பிலிப்பீன்சின் கிழக்கு கடலோரப் பகுதிகளை கடந்த இரு நாட்களாகத் தாக்கி வரும் சக்திவாய்ந்த புயல் காற்று தற்போது மணிலாவை நெருங்கி யுள்ள வேளையில் மக்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்று குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 'நாக்-டென்' என்றழைக்கப் படும் புயல் காற்று ஞாயிற்றுக் கிழமை மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முன்னதாகவே கடலோரப் பகுதி களுக்கு அருகே வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
புயல் தாக்குவதற்கு முன்னதாக வெளியேற்றப்படும் மக்கள். குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் முதலில் ராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படம்: ஏஎஃப்பி