சுவா சூ காங் எல்ஆர்டி: பயன்பாட்டுக்கு வந்த புதிய தளமேடைகள்

சுவா சூ காங் எல்ஆர்டி நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு புதிய தளமேடைகள் நேற்று முதல் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டன. அந்த இரு தளமேடைகளும் ரயில்களில் ஏறும், இறங்கும் பயணிகளுக்கு வெவ்வேறு பாதைகளைக் காட்டும். இதன் மூலம் பயணிகளின் கூட்ட நெரி சல் குறையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 1ஆம் 2ஆம் தளமேடைகளில் உள்ள பயணிகள் ரயில்களில் ஏறுவர். 3ஆம் 4ஆம் தளமேடைக ளில் பயணிகள் இறங்குவர்.

"புதிய தளமேடைகள் கட்டப் படுவதற்கு முன் எப்போதும் கூட்ட நெரிசலாக இருக்கும். இப்போது அந்த நெரிசல் குறையும் என்று நினைக்கிறேன்," என்றார் நாள்தோறும் சேகார் நிலையத்துக்கும் சுவா சூ காங் நிலை யத்துக்கும் இடையே பயணம் செய்யும் திரு லெக்ஸ் டான். "முன்பு உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் ஒரு வழி மட்டும் இருந்ததால், உச்ச நேரங் களில் கூட்ட நெரிசல், மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி யது. இப்போது நிலைமை சீரடை யும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார் வாரத்துக்கு மூன்று முறை சவுத் வியூ நிலையத் துக்கும் சுவா சூ காங் நிலை யத்துக்கும் இடையே பயணம் செய்யும் திருவாட்டி சுஸானா சைரி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!