மீறிய பேருந்து நிறுவனங்கள்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள பேருந்து முனையத்தில் விரைவு பேருந்துகளை மலேசிய போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் திடீர் சோதனை செய்ததில் பல பேருந்து நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூரை நோக்கி செல்லவிருந்த ஒரு விரைவு பேருந்தில் 2-வது ஓட்டுநர் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பேருந்து நிறுவனத்திற்கு அது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2-வது ஓட்டுநர் வேலையில் அமர்த்தப்படாத வரை அந்த பேருந்து ஓட்டுநர் பயணத்தைத் தொடங்க அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் கூறினார். சில பேருந்துகளில் டயர் பழுதடைந்திருந்தும் சில பேருந்துகளில் மோட்டார் சைக்கிள்கள் ஏற்றப்பட்டிருந்ததும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் முதல் நாள் ஜோகூரில் நடந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து விரைவு பேருந்துகள் சோதிக்கப்படுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!