சாலை விபத்து: பக்தர்கள் மூவர் பலி

விழுப்புரம்: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் மூவர் பரிதாபமாகப் பலியாகினர். சென்னையைச் சேர்ந்த 62 பக்தர்கள் வெள்ளிக்கிழமை மாலை சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பேருந்து பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பேருந்தின் இடதுபக்கம் அமர்ந்திருந்த மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!