புத்தாண்டு நாளிலிருந்து பழைய திறன்பேசிகளில் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது பிரபல குறுஞ்செய்திச் செயலியான வாட்ஸ்அப். பாதிக்கப்பட்ட வாடிக்கையா ளர்கள் புதிய, மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய திறன்பேசி களை வாங்கினால் மட்டுமே இனி வாட்ஸ்அப் சேவையைப் பெற இயலும்.
உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் அந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின் றனர். இந்த நிலையில், 2016 முடிவுடன் பழைய இயங்குதளங் களைக் கொண்ட திறன்பேசி களில் தனது சேவையை நிறுத்திக் கொள்ள இருப்பதாக ஏற்கெனவே வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து, ஐஃபோன் 3ஜிஎஸ், விண்டோஸ் ஃபோன் 7, ஆண்ட்ராய்ட் 2.1 அல்லது ஆண்ட்ராய்ட் 2.2 போன்ற திறன் பேசிகளை வைத்திருக்கும் மில்லி யன்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இனி இந்த திறன்பேசிகளில் வாட்ஸ்அப் இயங்காது 2017ஆம் ஆண்டிலிருந்து:
► ஆண்ட்ராய்ட் 2.1, 2.2
► விண்டோஸ் ஃபோன் 7
► ஐஃபோன் 3ஜிஎஸ் ஐஓஎஸ் 6
2017 ஜூன் மாதம் முதல்:
► பிளாக்பெரி
► நோக்கியா S40
► நோக்கியா சிம்பியன் S60