ஆறு ஆண்டுகளுக்கு முன் 'மதுரை டூ தேனி வழி : ஆண்டிப்பட்டி' என்ற படம் வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'மதுரை டூ தேனி - 2' என்ற புதிய படம் உருவாகிறது. இதில் விஷ்வக், சிவகாசி பாலா கதாநாயகர்கள். செளமியா, தேஜஸ்வி நாயகிகள். "ஓர் இளம் பெண்ணும் இரு இளையர் களும் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்க முயற்சிக்கிறார்கள். இம்முயற்சி வெற்றி பெறுகிறதா? என் பதே கதை. நகைச்சுவை,
காதல், குடும்ப உணர்வுகள் கலந்த காட்சிகளுடன் திரைக்கதை அமைந்திருக் கும். தேனியில் இருந்து மதுரை வரும் பேருந்து பயணத்தின் இடையில் நடக்கும் சுவாரசிய விஷயங் களைச் சொல்வதால்தான் இத்தலைப்பு. தமிழ்த் திரையுலகில் முதல் முயற்சியாக திரையரங்குகளில், மிகக் குறைவான கட்டணம், அதாவது 19 ரூபாயை மட்டும் செலுத்தி படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர் களுக்குத் தரும் விதமாக ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்," என்கிறார் இயக்குநர் குகன்.