புதுடெல்லி: நட்சத்திரக் காற் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடின உழைப்பைக் கண்டு தாம் உத்வேகம் அடைந்திருப்பதாக வும் அவர் தமது முன்மாதிரி என்றும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள் ளார்.
காற்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் போர்ச் சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ தமது கடின உழைப்பால் 31 வயது ஆகியுள்ள நிலையில் பல விருதுகளை வென்றுள்ளார்.