மெரின் பரேட் தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவு எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்று அத்தொகுதியின் அடித்தளத் தலை வர்களை ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் எச்சரித்துள்ளார். அத்தொகுதி உருவாக்கப் பட்டு 40 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச் சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்தார்.
"இந்தத் தொகுதியில் எப்போதும் நாம் 70 விழுக்காட்டுக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என்று எண்ணி விடக்கூடாது. இந்தத் தொகுதியில் நான் போட்டியில் அதிக வாக்குகளில் வென்றது 1992ல் நடந்த தேர்தலில்தான். "அதன்பின்னர் 2011ல் குறைந்த எண்ணிக்கையிலான வாக்கு களில்தான் வென்றோம். அந்த ஆண்டுத் தேர்தலின் முடிவு கள் அறிவித்தபோது, எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
கிராண்ட் மெர்குயூரே சிங்கப் பூர் ராக்ஸி ஹோட்டலில் நடந்த 'மெரின் பரேட் தொகுதி 40 ஆண்டு நிறைவு விருந்தில் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், கேக் வெட்டுகிறார். படம்: ஃபேஸ்புக்/எம்பரேடர்