மாணவர்கள் துணிவும் ஆர்வமும் கொண்டிருப்பதோடு தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் கேள்விகள் கேட்க பழகிக் கொள்ளவேண்டும் என்று கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். சிங்கப்பூர் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் நேற்று தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதன்முதலாக தொடக் கப்பள்ளியில் பாடம் படிக்கத் தொடங்கினர். அவர் களில் சிலர் மகிழ்ச்சி யுடன் கூடிய பூரிப்புடனும் சிலர் எப்படியிருக் கப்போகிறதோ என்று ஒருவித அச்சத்துடனுடம் தொடக்கப்பள்ளி யின் முதல் நாள் அனுபவத்தைப் பெற்றனர்.
பிரின்சஸ் எலிசபெத் தொடக் கப் பள்ளிக்குக் கல்வி அமைச்சர் இங் சீ மெங், நேற்று வருகைய ளித்து 210 தொடக்கநிலை ஒன் றாம் வகுப்பு மாணவர்கள், பெற்றோ ர்கள், ஆசிரியர்கள் ஆகியோரி டையே உரையாற்றினார். அப்போது அவர், மாணவர்களுக்குப் பாடத் தைக் கற்றுக்கொடுப்பதோடு பொறுப்புகள் யாவை என்பது பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வ தற்கு கொஞ்சம் வழிவிட வேண்டு ம் என்று ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கேட்டுக்கொண் டார். வலுவான அடிப்படைக் கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்கு வது மிக முக்கியம் என்றார் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங்,