பிரேசில் சிறையில் கலவரம்; சுமார் 60 பேர் மரணம்

பிரேசிலியா: பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள மனாவுஸ் என்ற நகரின் சிறைச்சாலையில் திங்கட் கிழமையன்று சாவ் பாலோ நகரத்தை மையமாகக் கொண்ட ஃபர்ஸ்ட் கேப்பிட்டல் கமாண்ட் என்ற போதைப் பெருள் கும்பலுக் கும் மனாவுஸ் நகரை மையமாகக் கொண்ட மற்றொரு கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்த தாகக் கூறப்படுகிறது. "போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நடைபெற்றுவரும் கொடூரமான போரில் இது மற்றோர் அத்தியாயம்," என்று அமேசோனாஸ் மாநில பாதுகாப்பு படையின் தலைவரான செர்ஜியோ ஃபாண்டெஸ் கூறினார்.

பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள மனாவுஸ் நகரில் இரு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இதில் பலரின் தலை துண்டிக்கப்பட்டு சிறைக் கதவுகளுக்கு வெளியே வீசி எறியப்பட்டதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சிறைவாசலுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் கைதிகளின் உறவினர்கள் கதறி அழுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!