யாஸ்மின் பேகம்
வித்தியாசமான சிந்தனைகொண்ட இளையர்கள் தங்களது எண்ணங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றும்போது அவை காண்போரை ஈர்ப்பதுடன் அவர்களது சிந்தனையையும் தூண்டும் விதத்தில் அமைகின்றன. உள்ளூர் இளையர்களுக்கு அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அண்மையில் விக்டோரியா ஹாலில் நடைபெற்ற 'சர்வேஷ் கலைத் திருவிழா'. 50க்கு மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. படைப்பாளிகளில் மூவர் தங்களது கலைப் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.