நெல்லை: ஆணவக் கொலை வழக்கில் முதன்முறையாக தமிழ கத்தில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரில் ஒருவர் பெண் ஆவார். சாதி மாறி திருமணம் செய்த தலித் இளைஞரின் சகோதரியை வெட்டிக் கொன்றதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம் இருவருக் கும் தூக்குத் தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் வண்ணா ரப்பேட்டையைச் சேர்ந்த 27 வயதான ரயில்வே ஊழியர் விஸ்வநாதன் என்பவர், தச்ச நல்லூரைச் சேர்ந்த காவேரி என்ப வரை காதலித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர். திடீரென்று மகள் மாயமான தால் அதிர்ச்சி அடைந்த காவேரி யின் தந்தை சங்கரநாராயணன், அவரைப் பல இடங்களிலும் தேடியுள்ளார்.
பின்னர் விஸ்வ நாதன் வீட்டுக்கும் சென்று விசாரித்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த விஸ்வநாதனின் மூத்த சகோதரி கல்பனா, தமக்கு எந்த விவரமும் தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால் சங்கரநாராயணனுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் அவரது மனைவி செல்லம்மாளும் சேர்ந்து கல்பனாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா, ஆணவக் கொலை செய்யப்பட்டது நெல்லை யில் பெரும் பரபரப்பையும் சோகத் தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார், சங்கர நாராயணனையும் அவரது மனைவியையும் கைது செய்தனர். இந்தப் படுகொலை வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதி அப்துல் காதர், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கொலை நடந்து எட்டு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.