அனார்கலி சின்னம் பதித்த பொருட்களின் விற்பனையாளர்களான சையது முகம்மது அண்ட் சன்ஸ் நிறுவனம் நேற்றுக் காலை.30 மணிக்கு தேக்கா மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள செய்தித்தாள் விநியோகிப்பாளரிடம் தமிழ் முரசு நாளிதழை வாங்கி, அங்குள்ள திறந்தவெளியில் வரிசையில் நின்ற முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு அனார் கலி பொன்னி அரிசி 1 கிலோ, அனார்கலி பாசிப்பருப்பு 200 கிராம், ஒரு பாக்கெட் அனார்கலி டேஸ்டி அப்பளம், ஒரு பாக்கெட் அனார்கலி பேரீச்சம்பழம் 120 கிராம் ஆகியவை கொண்ட அன் பளிப்புப் பைகளை வழங்கியது. வரிசையில் நின்ற முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு கூடுத லாக 5 கிலோ அனார்கலி பொன்னி அரிசியும் வழங்கப் பட்டது. சையது முகம்மது டிரேடர்ஸ் (சிங்கப்பூர்) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சுல்தான் அகம்மது கேஎஸ்எம், அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பேகம், பேரன் சையது முகம்மது டேனியல் ஜாஃபர் சாதிக் ஆகி யோர் அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்தனர்.
அனார்கலி சின்னம் பதித்த பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள். படம்: ஹாஜா