புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணியைச் சமாளிப்பது எளி தான காரியம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தெரி வித்துள்ளார். எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்குகிறது.
"எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலியா வலுவான அணி ஆகும். "இந்திய மண்ணில் ஆடுவது கடினம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், இந்திய வீரர்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.