பெங்களூர்: கர்நாடகாவில் பேருந்து விபத்தில் சிக்கி பதின்ம வயது இளையர் ஒருவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உதவி கேட்டு உயிருக்குப் போராடி அழுத அந்த இளையருக்கு மக்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதற்கு மாறாக அவரவர்களின் கைப்பேசியில் புகைப்படம் எடுப்ப திலும் காணொளி எடுப்பதிலுமே குறியாக இருந்தனர். குறித்த நேரத்திற்குள் இளையரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருந் தால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும் பத்தினர் துக்கத்துடன் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 25 நிமிடங்களாக அன்வர் அலி என்ற அந்த இளை யருக்கு எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி அவர் உதவி கேட்டு அழுது கெஞ்சுவதை காணொளி ஒன்று காட்டுகிறது. ஒரு ஆடவர் மட்டும் அன்வருக்கு தண்ணீர் கொடுக்கிறார். இறுதியில் அந்த 18 வயது இளையரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தபோது அவர் உயிரிழந்துவிட்டார்.
மருத்துவமனையில் உயிரிழந்த அன்வர் அலி. "மருத்துவ மனையில் அன்வ ருக்கு 7 பாட்டில் ரத்தம் செலுத்தினோம். 35 நிமிடத்திற்கு முன்னதாக மருத்துவ மனைக்கு கொண்டு வந்திருந்தால் அன்வர் அலியைக் காப்பாற்றி இருப் போம்," என்றனர் மருத்துவர்கள். படம்: யூ ட்யூப்பில் இருந்து எடுக்கப்பட்டது.