சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத் தைத் தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு முடக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று பட்டம் கொடுத்துள்ளார் அதிமுக எம்எல்ஏ தென்னரசு. நேற்று முன்தினம் பேரவையில் பேசிய அவர், முதலில் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலிதாவையும், அதிமுக பொதுச்செயலர் சசிகலாவையும் புகழ்ந்தார். இதையடுத்து, "ஜல்லிக் கட்டு நாயகன் முதல்வரை வணங்கி பேச்சைத் துவங்குகிறேன்," என்றார். இதைக் கேட்டு முதல்வர் பன்னீர் செல்வமும் அதிமுகவினரும் லேசாக சிரித்தனர்.
இதற்கிடையே, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த, உரிய ஏற்பாடு களைச் செய்து கொடுத்ததற்காக அதிபர், பிரதமர், ஆளுநர் ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச் செயலர் சசிகலா கடிதம் அனுப்பி உள்ளார். பிரதமருக்கான மற்றொரு கடிதத் தில், தமிழக கிராமப்புற மாணவ, மாணவியர் நலன் கருதி 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.