18 மணி நேரம் தொழிற்சாலையைச் சிதைத்த தீ

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே உள்ள பெரிய தொழிற்சாலையில் நேற்-று தீப்பற்றிக்கொண்டதில் மூவரைக் காணவில்லை என்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் தீக்காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கேவைட் மாநிலத்திலுள்ள ஜெனரல் டிரியாஸ் நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காயமுற்றோரில் மூவர் ஜப்பானி யர்கள் என்றும் அவர்கள் கூறினர். கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று பிற்பகலில் தீ முற்றாக அணைக்கப்பட்டது. தீப்பற்றியதும் மூன்று மாடிக் கட்ட டத்திலிருந்து குதித்த பலரும் படுகாயமுற்றனர். அச்சமயத்தில் 5,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!