சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர் பான விசாரணையின்போது எத்த கைய விவரத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசார ணையைப் பொறுத்தவரை தங்க ளது நிலை திறந்த புத்தகமாகவே உள்ளது என்றும் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை என் றும் கூறினார்.
"எந்த விசாரணைக்கும் தயா ராக உள்ளோம். உடல்நிலை தேறி வந்த நிலையில் மாரடைப்பு ஏற் பட்ட அந்த ஒரு நிமிடம் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலையில், வேறு எந்தவிதமான பிரச்சினைக ளும் இல்லை. அவர் தெளிவாக இருந்தார். "ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை," என்றார் பிரதாப் சி.ரெட்டி.