குடியிருப்புப் பகுதியில் சிக்கிய ராக்கெட் குண்டு

சென்னை: குடியிருப்புப் பகுதியில் ராக்கெட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அயனாவரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. இங்குள்ள சன்னிவேல் அடுக்குமாடிக் குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வெடிபொருள் போல் காட்சியளித்த ஒரு பொருளைக் கண்ட அக்குடியிருப்பு வாசிகள், உடனடியாக காவல்துறைக் குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலி சார் அது ராக்கெட் குண்டு என்பதை உறுதி செய்தனர். மேலும் அது ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது என்ப தும் தெரியவந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை என்றாலும் குடியிருப்புப் பகுதியில் ராக் கெட் குண்டு எப்படி வந்தது என்பது குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!