சோல்: தென்கொரியாவில் உயர் மாடிக் கடைத்தொகு திக் கட்டடம் ஒன்றில் நேற்று தீ பற்றியது. நான்கு பேரைப் பலிவாங் கிய இந்தத் தீ விபத்தில் 40க்கு மேற்- பட்டோர் காயமடைந்தனர். 47 பேர் மூச்சுத் திணற லுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் இரு வர் கட்டுமான ஊழியர் கள், மற்ற இருவர் கடைத் தொகுதி ஊழியர்கள். தென்கொரியாவின் தென்- பகுதியில் உள்ள டொங் டான் என்னும் நக ரில் இந்தக் கடைத் தொகுதி உள்ளது. அங் குள்ள குழந்தைகள் விளை யாடுமிடச் சீரமைப் பின் போது இரும்புக் கம்பி- கள் சிலவற்றை இணைப்பதற்காக பற்ற வைக்கும் பணி (வெல்டிங்) நடந்துகொண்டிருந்தது.
அப்போது நெருப்புப் பொறிகள் நாலா பக்கமும் தெறித்ததால், தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப் படுகிறது. நல்ல வேளையாக தீப்பற்றிய- போது குழந்தைகள் விளையாட்டுக் கூடம் மூடியிருந்ததால் உயிர்ப்பலி குறைந்துள்ளது. தென்கொரியாவில் இதற்கு முன்பு நடந்த சில தீ விபத்துகளுக்- கும் பற்றவைக்கும் பணியின்போது தீப்பொறி பரவியதே காரணமாகக் கூறப்படுகிறது.