திமுகவினர் போராட்டம்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்து தமிழகம் முழு வதும் திமுகவினர் போராட்டத் தில் குதித்தனர். சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பாக உண்ணா விரதம் மேற்கொண்ட செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலிஸ் கைது செய்தது. பல பகுதிகளிலும் கடைகள், பேருந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. சட்டமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார். பழனிசாமிக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதர வாக 11 பேரும் வாக்களித்தனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!