தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்து தமிழகம் முழு வதும் திமுகவினர் போராட்டத் தில் குதித்தனர். சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பாக உண்ணா விரதம் மேற்கொண்ட செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலிஸ் கைது செய்தது. பல பகுதிகளிலும் கடைகள், பேருந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. சட்டமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார். பழனிசாமிக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதர வாக 11 பேரும் வாக்களித்தனர்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg