பொன்னேரி: முதல்வர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முதல்வராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்டதை, தாம் ஜனநாயகப் படுகொலையாகக் கருதுவதாக அவர் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார். "சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவியேற்ற பிறகும் அவர்களை அடைத்து வைத்துள் ளனர். இதிலிருந்து வெளியே ஓடி விடுவார்கள், மாயமாகி விடுவார் கள் என்ற அச்சம் உள்ளது. உடனடியாக ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்," என்றார் சீமான்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg