சென்னை: தர்மம் வெல்வதற்கு இன்னும் காலம் உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடந்து வரும் தர்ம யுத்தம் தொடரும் என்றார்.
"தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் வெல்லும். இது சரித்திரம். தர்மம் வெல்வ தற்கு காலம் உள்ளது. "எம்எல்ஏக்களை அவரவர் தொகுதிக்கு அனுப்பி வையுங்கள். அந்த எம்எல்ஏக்கள் தொகுதி மக்களைச் சந்தித்துவிட்டு வாக் களிக்கட்டும் என்று கோரினோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரினோம். ஆனால் அதற்கு சபாநாயகர் ஒப்புக்கொள்ள வில்லை. திமுக சட்டசபை உறுப்பினர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர்," என்றார் பன் னீர்செல்வம்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg