கொழும்பு: பெண்கள் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற் றுள்ளது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி இரண்டாவது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன் னேறியதுடன், உலகக் கிண்ணப் போட்டிக்கும் தகுதி பெற்றது. 11வது பெண்கள் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு ஏற்கெனவே நான்கு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று விட்டன. எஞ்சிய நான்கு அணிகளைத் தேர்வு செய்வதற் கான தகுதிச் சுற்றுப் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.
பங்ளாதேஷ் அணியின் விக்கெட் சாய்ந்ததை அடுத்து துள்ளிக் குதித்துக் கொண்டாடும் இந்திய மகளிர். சக்கைப்போடு போட்ட இந்திய மகளிர் அணி வெற்றியைப் பதிவு செய்து உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றது. படம்: தி இந்து
விவரம்: epaper.tamilmurasu.com.sg