அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா பெங்களுரு சிறையிலி ருந்து தமிழக ஆட்சியை நடத்தத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது ஆதரவாளரான எடப் பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் நிகழ்ந்த நம் பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. முன்னதாக அமளி ஏற்பட்டதில் தாம் தாக்கப்பட்டு தமது சட்டை கிழிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டா லின் புகார் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளை பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை யில் இருந்தவாறே தொலைக்காட்சி மூலம் சசிகலா பார்த்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவிக்கிறது.
விவரம்: epaper.tamilmurasu.com.sg