புதுடெல்லி: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் (ஐபிஎல்) தொடரில் புனே அணித் தலைவர் பொறுப்பிலிருந்து டோனி அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப் பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னை அணியின் அணித் தலைவர் டோனியை புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி கடந்த பருவத்தில் புனே அணித் தலைவராக டோனி செயல் பட்டார்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg