லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ காற்பந்துப் போட்டியில் செல்சி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வுல்வர்ஹேம்டன் வண்டரர்ஸை (வூல்வ்ஸ்) அது தோற்கடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது. இதன் விளைவாக லீக் பட்டியலில் முன்னிலை வகித்து வெற்றியாளர் பட்டத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் செல்சி எஃப்ஏ கிண்ணத்தையும் நெருங்கி உள்ளது. வூல்வ்ஸ் குழுவின் விளை யாட்டரங்கத்தில் நடைபெற்ற ஐந்தாவது சுற்று ஆட்டத்துக்கு செல்சி நிர்வாகி அண்டோனியோ கோண்ட்டே பல மாற்றங்களைச் செய்திருந்தார்.
கோல் போடும் முயற்சியில் செல்சியின் வீலன் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்
விவரம்: epaper.tamilmurasu.com.sg