சுதாஸகி ராமன்
சிங்கப்பூரர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான அர சாங்கக் கொள்கைகளை எவ்வாறு உருவாக்கி, அமல்படுத்தலாம் என்பதை இளையர்கள் சிலர் அண்மையில் அனுபவம் மூலம் கற்றுக்கொண்டனர். இம்மாதம் 11, 12ஆம் தேதி களில் முதல்முறையாக பல்கலைக் கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கப்பூர் மாதிரி அமைச்சரவை நிகழ்வில் சுமார் 100 மாணவர்கள் ஈடுபட்டு இந்த சுவாரசியமான அனுபவத்தைப் பெற்றனர். சன்டெக் சிட்டி மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர் கள் ஆராய்ச்சி, கலந்துரை யாடல்கள், விவாதங்கள் ஆகிய வற்றை மேற்கொண்டு அவற்றின் மூலம் கொள்கைகள் உருவாக்கு தல் பற்றித் தெரிந்துகொண்டனர்.
சிறந்த அமைச்சுக்கான பரிசை வென்றது சுப்பிரமணியனின் (வலக்கோடி) மாதிரி அமைச்சு. அந்தக் குழுவினருடன் தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் (நடுவில்). படம்: ரீச் சிங்கப்பூர்
விவரம்: http://epaper.tamilmurasu.com.sg">epaper.tamilmurasu.com.sg