லண்டன்: லீக் கிண்ணக் காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு மான்செஸ்டர் யுனைடெட், சௌத்ஹேம்டன் குழுக்கள் மோதவிருக்கின்றன. இரு குழுக்களுமே முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாமல் களம் காணுவதால், அச்சூழ்நிலையை யார் திறமையாக கையாள்கிறார் களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சௌத்ஹேம்டன் குழுவின் ஜோசே ஃபான்டி விற்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத விர்ஜில் இன்றைய ஆட்டத்திலும் விளையாடமாட்டார். இந்த வீரர்களும் இல்லாத நிலையிலும் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் சௌத் ஹேம்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தியது.
நிர்வாகி மொரின்யோவுடன் மேன்யூ வீரர் ரூனி. படம்: ஏஎஃப்பி