மொத்தம் 81 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கப்பூரின் ஆகப் பெரிய இயற்கைப் பூங்கா முழுமை வடிவம் பெற்றுள்ளது. அந்த செஸ்ட்நட் இயற்கைப் பூங்காவின் 64 ஹெக்டர் வடபகுதி நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அது முழுமையடைந்துள்ளது. உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ் மண்ட் லீ இதனை அதிகாரபூர்வ மாகத் திறந்து வைத்தார். ஹாலந்து- புக்கிட் தீமா குழுத் தொகுதி உறுப்பினரும் வெளி யுறவு அமைச்சருமான விவியன் பாலகிருஷ்ணன், மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லியாங் எங் ஹுவா ஆகியோர் கிட்டத்தட்ட 200 குடியிருப்பாளர் கள் மற்றும் தொண்டூழியர்களு டன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கடினமான மலைப் பிரதேச சைக்கிளோட்டப் பாதை 8.2 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்