சிங்கப்பூரில் வழக்கறிஞர்கள் தங்களுடைய சட்ட தொழிலில் தொழில்நுட்பங்களைக் கைக் கொள்வதற்குத் தோதாக அரசாங் கத்திடமிருந்து விரைவில் ஆதரவு பெறவிருக்கிறார்கள். இதற்கு வகை செய்யும் $2.8 மில்லியன் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 'தொழில்நுட்ப வழக்கறிஞர் தொழில் தொடக்கம்' என்ற அந்தச் செயல்திட்டம், சிங்கப்பூர் சட்டத் துறை நிறுவனங்களுக்கு ஆகும் தொழில்நுட்பம் தொடர்பான செலவுகளில் 70% வரை நிதி உதவி செய்யும்.
சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜேந்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்