மானபங்கம்: முதலாளிக்குத் தண்டனை

பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பணிப் பெண்ணை மானபங்கப் படுத்தியதற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஜாக்கோப் குமார் ரோஸ் பி. இசாக் ரோஸ், 40, என்பவருக்கு நேற்று 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அந்தப் பணிப்பெண் 2015 நவம்பர் 28ஆம் தேதி வேலையைத் தொடங்கினார். இரண்டு மாதத்திற்குள்ளேயே இந்த முதலாளி அவரிடம் தன்னுடைய கைவரிசையைத் தொடங்கிவிட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. முதலாளி தன்னிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அந்தப் பணிப்பெண் தன்னை வேலைக்கு சேர்த்துவிட்ட நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார். அந்த நிறுவனம் மலேசியரான ஜாக்கோப் குமாரை எச்சரித்தது. இதனையடுத்து, அந்த முதலாளி பணிப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது 2016 ஜனவரியில் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!