‘சுகாதார காரணங்களுக்காக பறவைகள் கொல்லப்படுகின்றன’

அரசு, கடந்த ஆண்டு விலங்குகளை நிர்வகிப்பதற்காக 800 மில்லியன் வெள்ளி செலவழித்தது என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், விலங்குகளைக் கொல்வதற்கான செலவுகளும் இதில் உள்ளடக்கும் என்றார். "சிறிய தொகை மட்டுமே விலங்குகளை அழிப்பதற்கு செல வழிக்கப்பட்டது. இதனால் இதற்கு ஆகும் செலவுகளை ஆணையம் கணக்கில் கொள்வதில்லை," என்று அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் பேசிய நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் இங், விலங்குகளைக் கொல்வதற்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பினார். மூன்று ஆண்டுகளில் இந்தச் செலவு அதிகரிக்குமா என்றும் அவர் கேட்டார்.

சுகாதார காரணங்களுக்காகவே விலங்குகள் அழிக்கப்படுகின்றன என்று நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ சொன்னார். கடந்த வாரம் சின் மிங்கில் கோழிகள் கொல்லப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவர் பதில் அளித்தார். கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!