விபத்து: 4 கல்லூரி மாணவிகள் பலி

குமரி: கல்லூரி மாணவிகள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 4 மாணவிகள் பரிதாபமாக பலியாகினர். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. தனியார் கல்லூரிக்குச் சொந்தமான வேன் ஒன்றில் மாணவிகள் சிலர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று, வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், சிவரஞ்சனி, தீபா, மஞ்சி, சங்கீதா ஆகிய நான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!